தாராபுரம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

கோவை, நவ.3: திருப்பூரிலிருந்து நேற்று இரவு தாராபுரம் நோக்கி வந்துகொண்டிருந்த காரும் பழனியிலிருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் திருப்பூரை சேரந்த நிதி நிறுவன ஊழியர் ராமநாதனின் மனைவி சத்யா, மற்றும் அவரது குழந்தைகள் 6 வயது மித்தின், 8 வயது துவாரிகா ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேய பலியானார்கள்.

இவ்விபத்தில் படுகாயமடைந்த ராமநாதனுக்கு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவத்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், "ராமநாதனின் சகோதரர் கண்ணன் என்பவர் திண்டுக்கல் மாவட்டம் இடையன்கோட்டையில் இறந்துவிட்டதால் அந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள குடும்பத்துடன் காரில் சென்றபொழுது ஏற்பட்ட விபத்து இது ." 

இசம்பவம் அவர்களது உறவினர்களிடையே பெரும் அதிர்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மூன்றுபேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கபட்டுள்ளன.

இவ்விபத்து குறித்து கொண்டடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...