நொய்யல் மாரத்தான் ஓட்டப் பந்தய வீரர்களுக்கு மருத்துவ ஆதரவு சேவையை வழங்கிய ஆர்த்தோ-ஒன்

கோவை, நவம்பர் 2 : கோவையில் நடைபெற்ற நொய்யல் அரை மாரத்தான் நிகழ்வில் பங்கேற்ற ஓட்டப்பந்தய வீரர்களுக்கு ஆர்த்தோ-ஒன் மருத்துவ ஆதரவு சேவையை வழங்கியது. 

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள நீர்நிலைகளை, குறிப்பாக நொய்யல் ஆற்றை மாசில்லாமல் பாதுகாப்பது மீது விழிப்புணர்வை உருவாக்குவதற்காக இந்த மாரத்தான் நிகழ்வு நடைபெற்றது. இதில், 1000-க்கும் மேற்பட்டோர் அதிக உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். 

விளையாட்டு ஆர்வலர்களுக்கு மிக நவீன மருத்துவ கவனிப்பு சேவையையும், சிகிச்சையையும் வழங்குவதில் பிரபலமாக அறியப்படும் ஆர்த்தோ-ஒன், இதில் பங்கேற்ற ஓட்டப்பந்தய வீரர்களுக்கு ஓட்டப்பந்தய வழித்தடத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு முதலுதவியையும், சிகிச்சையையும் வழங்கியதுடன் மாரத்தான் நிகழ்வுக்கு முந்தைய தயாராகுதல் மற்றும் நிகழ்வுக்கு பிந்தைய தளர்வாக்கல் ஆலோசனை சேவையையும் வழங்கியது. 

இந்நிகழ்ச்சியின் போது ஆர்த்தோ-ஒன் நிறுவனர் டாக்டர். டேவிட் ஏ. ராஜன் கூறுகையில், இன்றைய காலகட்டத்தில் வாக்கத்தான் மற்றும் மாரத்தான் போன்ற நிகழ்வுகள் மக்கள் மத்தியில் அதிகளவு வரவேற்பையும், பங்கேற்பையும் பெற்று வருகின்றன. ஒரு சிறந்த நோக்கத்திற்காக நடத்தப்படும் இந்த மாரத்தான் நிகழ்வில் பங்கேற்க ஏராளமான எண்ணிக்கையில் மக்கள் வந்திருப்பதைக் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது. அனைத்து வயதுப் பிரிவுகளையும் சேர்ந்த நபர்கள் இந்நிகழ்வில் அதிக உற்சாகத்தோடு பங்கேற்றிருக்கின்றனர். இவர்கள் வெளிப்படுத்திய விளையாட்டின் மீதான ஆர்வமும், தாக்கமும் பெரிதும் பாராட்டுக்குரியது," 

மேலும், இந்த மாரத்தான் நிகழ்வில் ஒரு அங்கமாக பங்கேற்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இத்தகைய நிகழ்வுகளின் பங்கேற்பாளர்கள் சிரமமில்லாமல் இலக்கைச் சென்றடைவதற்கு நாங்கள் உதவ முடியும் என்பதால் இதுபோன்ற இன்னும் பல நிகழ்வுகளில் எமது சேவையை வழங்குவதை நாங்கள் ஆவலோடு எதிர்நோக்குகிறோம். என்றார். 

ஆர்த்தோ-ஒன் குறித்து: டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனத்தால் ஆர்த்தோ பெட்டிக்ஸ் (எலும்பு முடநீக்கவியல்) சிறப்புத்துறையின் கீழ் அகில இந்திய லைஃப் ஸ்டைல் மருத்துவமனை மற்றும் கிளினிக் தரவரிசை சர்வே நடத்தப்பட்டது. அதில், 2017-ல் தென்னிந்தியாவிலுள்ள முதன்மையான 10 மருத்துவமனைகளுள் ஒன்றாக ஆர்த்தோ-ஒன் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...