வால்பாறையில் பசுமாட்டை கடித்துக் கொன்ற சிறுத்தை - தொடர் அச்சுறுத்தலால் பொதுமக்கள் பீதி

கோவை, நவம்பர் 2 : கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலைத் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாட்டைச் சிறுத்தை கடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வால்பாறையை அடுத்துள்ள கருமலை எல்.டி. டிவிசனில் தேயிலை தோட்ட தொழிலாளி விஜயகுமாரி என்பவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வந்த 4 ½ வயது மதிக்கத்தக்கப் பசுமாடு அங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் வியாழக்  கிழமை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, தேயிலைச் செடிக்குள் பதுங்கியிருந்த சிறுத்தைப்புலி தாக்கியதில், பசுமாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. 

இந்தச் சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கருமலை எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் பகல் நேரத்திலேயே சிறுத்தை நுழைந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால், மக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். மேலும், குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...