கோவை, நவம்பர் 2 : கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலைத் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாட்டைச் சிறுத்தை கடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வால்பாறையை அடுத்துள்ள கருமலை எல்.டி. டிவிசனில் தேயிலை தோட்ட தொழிலாளி விஜயகுமாரி என்பவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வந்த 4 ½ வயது மதிக்கத்தக்கப் பசுமாடு அங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் வியாழக் கிழமை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, தேயிலைச் செடிக்குள் பதுங்கியிருந்த சிறுத்தைப்புலி தாக்கியதில், பசுமாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இந்தச் சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கருமலை எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் பகல் நேரத்திலேயே சிறுத்தை நுழைந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால், மக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். மேலும், குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறையை அடுத்துள்ள கருமலை எல்.டி. டிவிசனில் தேயிலை தோட்ட தொழிலாளி விஜயகுமாரி என்பவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வந்த 4 ½ வயது மதிக்கத்தக்கப் பசுமாடு அங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் வியாழக் கிழமை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, தேயிலைச் செடிக்குள் பதுங்கியிருந்த சிறுத்தைப்புலி தாக்கியதில், பசுமாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இந்தச் சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கருமலை எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் பகல் நேரத்திலேயே சிறுத்தை நுழைந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால், மக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். மேலும், குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.