வால்பாறையில் 20 சதவிகிதம் போனஸ் வழங்கக் கோரி தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்

கோவை, நவம்பர் 1: வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 20 சதவிகிதம் போனஸ் வழங்க வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வால்பாறை அடுத்துள்ள சோலையார் பகுதியில் ஜெய்ஸ்ரீ தனியார் எஸ்டேட் நிர்வாகத்திற்குச் சொந்தமாக நான்கு எஸ்டேட்டுகள் உள்ளது. இதில் 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். எஸ்டேட் நிர்வாகத்தினால் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் 10 தினங்களுக்கு முன்பாகவே வழங்கப்படுவது வழக்கம்.



இந்த நிலையில் நடப்பாண்டுக்கான போனஸ் 8.33 சதவிகிதமாக குறைத்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிலாளர்கள் போனஸ் தொகையினை வாங்க மறுத்து 20 சதவிகிதம் போனஸ் வேண்டும் என்று கடந்த அக்டோபர் 7-ம் தேதியன்று தொழிற்சாலை முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தொடர் போராட்டம் நடத்தி வந்த தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தை தொழிற்சங்கத்தைச் சேர்ந்த கேசவ முருகன், ஐஎன்டியுசி பிரபாகரன் மற்றும் சிஐடியு கம்யூனிஸ்ட் கட்சி ராஜன் ஆகிய தொழிற்சங்கங்களுடன் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தினர் கடந்த 27ம் தேதி கோவையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதிலும் உடன்பாடு ஏற்படாததால் தொழிற்சங்கத்தினர் 20 சதவிகிதம் போனஸை எஸ்டேட் நிர்வாகம் வழங்கும் வரை சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருந்தனர். 

இதனைத்தொடர்ந்து, மேற்கண்ட தொழிற்சங்கங்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் இணைந்து இன்று 3-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...