ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நோயாளிகளின் சிகிச்சைக்கு ஈஎம்ஐ திட்டம் அறிமுகம்

கோவை, நவம்பர் 1: கோவையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நோயாளிகளின் சிகிச்சைக்கான எளிய ஈஎம்ஐ திட்டம் காபிடல் ஃப்லோட் நிறுவனம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



இந்த அறிமுக நிகழ்ச்சியில் முதன்மை இயக்க அதிகாரி திரு.வி.ராமகிருஷ்ணா பேசுகையில், இந்தத் திட்டத்தின் மூலம் நோயாளிகளுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ. 3 லட்சம் வரை பணம் கடனாக வட்டி இல்லாமல் வழங்கப்படும். இது ஒரு லாப நோக்கமற்று செயல்படுத்தப்பட்டுள்ளது. கடன் பெற விண்ணப்பம் ஆய்வு கட்டணங்களோ வேறு செலவுகளோ எதுவும் இல்லை. மருத்துவமனைக்கோ அல்லது கடன்பெறவோ முன்பணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்றார்.

இதனைத்தொடர்ந்து, காபிடல் ஃப்லோட் கோவை கிளை மேலாளர் திரு. மணிகண்டன் பேசுகையில், முன்பணம் எதுவும் இல்லாமல் வட்டி இன்றி ஆவண கட்டணமின்றி இந்தத் திட்டத்தினை துவங்கியிருப்பது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள், ஒன்பது மாதங்கள் மற்றும் பன்னிரண்டு மாதங்கள் என்ற எளிதான சுலப தவனை முறையில் இந்தக் கடன் வசதி வழங்கப்படுகிறது.



நோயாளிகளும், ரத்த உறவுகளும் இந்தக் கடனுக்காக அவர்களது ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் வங்கி விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் மூலம் 70 சதவிகிதம் நோயாளிகள் தங்கள் மருத்துவ செலவுகளை உடனடியாக பெற முடியும். கோவை மக்களின் நலனுக்காக எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் மற்றொரு சமூக சேவை முயற்சியாக இது கருதப்படுகிறது என்றார்.

இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை டீன் மருத்துவர் திரு. பி.சுகுமாரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...