காற்றில் பறக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தடை - பேனருக்கு பதிலாக பலூனில் அலப்பறை

கோவை, அக்டோபர் 31: கோவை காந்திபுரம் மேம்பாலம் திறப்பு விழாவை முன்னிட்டு, முதலமைச்சர், துணை முதலமைச்சர் படங்களுடன் பிரமாண்ட பலூன் பறக்கவிடப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

காந்திபுரம் பகுதியில் 1,752 மீட்டர் நீளத்தில் பிரம்மாண்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கின்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் ஆகியோர் உருவ படத்துடன் கூடிய பிரம்மாண்ட பலூனை அமைச்சர் வேலுமணி பறக்கவிட்டார். 



உயிருடன் இருப்பவர்கள் புகைப்படங்களை பிளக்ஸ், பேனர் போன்றவற்றில் விளம்பரம் செய்யக்கூடாது என நீதிமன்ற உத்திரவிட்டிருந்தது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக பலூன் மூலம் இவர்களின் புகைப்படங்கள் போடப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டு இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதேவேளையில், அண்ணா புகைப்படத்துடனும், இரட்டை இலை சின்னத்துடனும் பாலம் முழுவதும் அ.தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டு இருப்பது குறிப்பிடதக்கது.

Newsletter

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...