கோவை, அக்டோபர் 31: கோவை காந்திபுரம் மேம்பாலம் திறப்பு விழாவை முன்னிட்டு, முதலமைச்சர், துணை முதலமைச்சர் படங்களுடன் பிரமாண்ட பலூன் பறக்கவிடப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காந்திபுரம் பகுதியில் 1,752 மீட்டர் நீளத்தில் பிரம்மாண்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கின்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் ஆகியோர் உருவ படத்துடன் கூடிய பிரம்மாண்ட பலூனை அமைச்சர் வேலுமணி பறக்கவிட்டார்.

உயிருடன் இருப்பவர்கள் புகைப்படங்களை பிளக்ஸ், பேனர் போன்றவற்றில் விளம்பரம் செய்யக்கூடாது என நீதிமன்ற உத்திரவிட்டிருந்தது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக பலூன் மூலம் இவர்களின் புகைப்படங்கள் போடப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டு இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதேவேளையில், அண்ணா புகைப்படத்துடனும், இரட்டை இலை சின்னத்துடனும் பாலம் முழுவதும் அ.தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டு இருப்பது குறிப்பிடதக்கது.
காந்திபுரம் பகுதியில் 1,752 மீட்டர் நீளத்தில் பிரம்மாண்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கின்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் ஆகியோர் உருவ படத்துடன் கூடிய பிரம்மாண்ட பலூனை அமைச்சர் வேலுமணி பறக்கவிட்டார்.

உயிருடன் இருப்பவர்கள் புகைப்படங்களை பிளக்ஸ், பேனர் போன்றவற்றில் விளம்பரம் செய்யக்கூடாது என நீதிமன்ற உத்திரவிட்டிருந்தது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக பலூன் மூலம் இவர்களின் புகைப்படங்கள் போடப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டு இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதேவேளையில், அண்ணா புகைப்படத்துடனும், இரட்டை இலை சின்னத்துடனும் பாலம் முழுவதும் அ.தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டு இருப்பது குறிப்பிடதக்கது.