தேவர் ஜெயந்தி விழாவுக்கு பாதுகாப்புக்கு சென்ற கோவை உதவி ஆய்வாளர் பலி

கோவை, அக்டோபர் 31: முத்து பழனியப்பன் (54), தேவர் ஜெயந்தி விழாவுக்கு பாதுகாப்புக்கு சென்ற கோவை உதவி ஆய்வாளர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நேற்று மரணமடைந்தார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளின் போது ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் குருபூஜை நடத்தப்படுகிறது. அதன்படி, அவரின் பிறந்தநாளான நேற்று தமிழக அரசு சார்பில் குருபூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. முதலைமச்சர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த விழாவுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து போலீசார் பாதுகாப்புக்கு சென்றிருந்தனர். 

கோவை மாவட்டத்தில் இருந்து ஆயுதப்படையில் சிறப்பு துணை ஆய்வாளராக பணியாற்றி வந்த முத்து பழனியப்பன் என்பவரும் பாதுகாப்புக்கு சென்றிருந்தார். . இந்த நிலையில், நேற்று பாதுகாப்பு பணியை முடித்த அவர் பரமக்குடியை அடுத்த முல்லைப்பள்ளி என்ற இடத்தில் ஓய்வெடுக்க சென்றார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார் . தற்போது அவரது உடல் பரமக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 

இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்

காவல்துறையில் பணியாற்றும் போதே முத்து பழனியப்பன் பலியானதால் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு காவல்துறையில் வேலை கிடைக்கும் என்பதும், அவரது இளைய மகன் அகில் சுஜின் கோவையில் மருத்துவப்படிப்பை மேற்கொண்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...