நண்பரை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள்தண்டனை

கோவை, அக்டோபர் 30:  கடந்த 2013-ம் ஆண்டு நண்பனைக் கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி விஜயா உத்தரவிட்டுள்ளார். 

கூடலூரைச் சேர்ந்த வஹிதா பானு என்பவர் கணவர் மற்றும் தனது இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். குடிப்பழக்கத்தால் அடிமையான தனது கணவருடன் வாழ பிடிக்காத பானுவுக்கு, எதிர் வீட்டைச் சேர்ந்த மதிவாணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் நெருங்கிப் பழக ஆரம்பித்தனர். அப்போது, கோவையில் ஏதாவது நிறுவனத்தில் தனக்கு வேலை வாங்கித் தருமாறு பானு, மதிவாணனிடம் கேட்டுள்ளார். அதன்பேரில், இருவரும் கோவைக்கு வந்துள்ளனர். 

கோவையில் துணிக்கடையில் பானுவுக்கு வேலைகிடைத்தது. அப்போது, சாய்பாபா காலனி, கே.கே.புதூரைச் சேர்ந்த சதீஷ் (30) என்ற தனது நண்பனை மதிவாணன் அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இதனிடையே, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறால், பானுவுடனான தொடர்பை மதிவாணன் சிறிது காலம் துண்டித்திருந்தார். பின்னர், சுமார் 6 மாதத்திற்கு பிறகு, உறவைப் புதுப்பிப்பதற்காக அலைபேசியில் பானுவை மதிவாணன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, தனக்கும், சதீஷிக்கும் திருமணம் நடைபெற்றுவிட்டதாக பானு கூறியுள்ளார். 

இதனால், ஆத்திரமடைந்த மதிவாணன், சதீஷை கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்று, கண்ணில் மிளகாய் பொடித்தூவி, கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த மதுக்கரை போலீஸார், மதிவாணனை கைது செய்து கோவை 4-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி விஜயா, குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், ரூ.10 ஆயிரம் அபராதமும்,  அதனைக் கட்டத் தவறினால் மேலும் 3 மாத காலம் சிறைதண்டனை விதிக்கப்படும் என அவர் ஆணையிட்டார். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...