கோவையில் அதிகரித்து வரும் ”செல்ஃப் டிரைவிங் கார்” கலாச்சாரம் - வாடகை கார் ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதாக புகார்



கோவை, அக்டோபர் 30 : ”செல்ஃப் டிரைவிங் கார்”  முறை அதிகரித்து வருவதால், வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் திரு.டி.என்.ஹரிஹரனிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர், கோவை மாவட்ட ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவில் கூறியுள்ளதாவது, கோவை மாவட்டத்தில் தற்போது இயங்கி வரும் கர்நாடக மாநிலத்தின் ”செல்ஃப் டிரைவிங் கார்” பயன்பாடு அதிகரித்துள்ளது . இதனால், வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நடப்பாண்டில் நாடாளுமன்றம்  மோட்டார் வாகனச் சட்டம் 2017 என்ற சட்டத்தை  அமல்படுத்த உள்ளது. இந்த சட்டத்தின் மூலம் ஏற்படும் விளைவுகள் என்னவென்றால், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஓட்டுநர் பயிற்சி பள்ளி, வாடகைக்கு வாகனம் ஓட்டும் அலுவலகம், இவை அனைத்தும் ஒரே அலுவலகம் என்றும், கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும் தொழில் செய்ய வேண்டும் என்ற முறையில் அந்த சட்டத்தை வடிவமைத்து உள்ளார்கள். இதன்மூலம் மோட்டார் தொழில் பாதிப்பு அடையும் அவலம் உருவாகியுள்ளது. 

அதாவது, எஃப்.சி.(FC) வேலைகள் மற்றும் வாகன வேலைகள் அனைத்தும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே பார்க்க முடியும் என்பதால், பல வாகனங்களை இயக்க முடியாமல் போகும் சூழ்நிலை உருவாக உள்ளது. 

மேலும், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் என்ற முறை பொதுமக்களிடையே இருக்காது. ஒவ்வொரு முறையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இடம் புதிதாக பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். வேக கட்டுப்பாட்டு கருவையை சுற்றுலா வாகனங்களுக்கு பொருத்துவதை நீக்க வேண்டும். 8-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மட்டும் பேட்ச் உரிமம் முறையை ரத்து செய்ய வேண்டும். வாகன காப்பீட்டுத் தொகையை குறைக்க வேண்டும்.

அண்டை மாநிலங்களை போல அனைத்து வாகனங்களுக்கும் டி-போர்டு அனுமதி கொடுக்க வேண்டும். கனரக வாகனங்களுக்கு கொடுக்கும் அனைத்து மாநிலங்களுக்கு சென்ற வர உரிமத்தை போல, சுற்றுலா வாகனங்களுக்கும் தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...