பணியின் போது மின்சாரம் தாக்கி கைகள் பாதிக்கப்பட்ட இளைஞர் உதவித்தொகை கோரி மனு

கோவை, அக்டோபர் 30-  பணியின் போது மின்சாரம் தாக்கியதால் இரு கைகளும் பாதிக்கப்பட்ட இளைஞர் செந்தில்குமார், இழப்பீட்டுத் தொகையினை பெற்றுத் தரக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்தார்.



விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கடந்த 2010-ம் ஆண்டு கோவை நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்த சேது என்பவரின் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் இரு கைகளும் செயல் இழந்தன.

இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் கைகள் பாதிக்கப்பட்ட அவருக்கு 6 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்திரவிட்டது. இந்த தொகையினை வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் வசூல் செய்து பாதிக்கப்பட்டவருக்கு வழங்க நீதிமன்றம் உத்திரவிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அவர் கோவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் பல முறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் திரு. டி.என்.ஹரிஹரன்-யிடம் தனது இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தரக் கோரி இன்று செந்தில்குமார் மனு அளித்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...