கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறக் கோரி மனு

கோவை, அக்டோபர் 30-  கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெறக் கோரியும், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் முகிலனை விடுதலை செய்யக் கோரியும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சுற்றுசூழல் ஆர்வலர்களுடன் மாவட்ட அட்சியரிடம் மனு அளித்தனர்.



இன்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன்  செய்தியாளர்களிடம்  கூறியதாவது:-

"சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் முகிலன் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார். காவிரி படுகையில் மணல் கடத்தல், கூடங்குளம் அணு உலை, கனிமவளங்கள் கடத்தல், இதர ஆறுகளில் மணல் கொள்ளை போன்ற செயல்களுக்கு எதிராக போராடி வரும் அவரை சட்டவிரோத செயல்களை செய்பவர்களுக்கு ஆதரவாக காவல் துறை கைது செய்துள்ளது. உடனடியாக முகிலனை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கூடங்குளத்தில் போராடியதற்காக பொதுமக்கள் மீது பதியப்பட்ட 132 வழக்குகளையும் திரும்பப் பெற நீதிமன்றம் அறிவுறுத்தியும் இது வரை வழக்குகள் திரும்பப் பெறப்படவில்லை. வழக்குகளை திரும்பப் பெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...