கந்து வட்டி கும்பல் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க மனு


கோவை, அக்டோபர் 30: கந்து வட்டி கும்பல் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி பாரத் சேனா அமைப்பினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-



நெல்லையில் கந்து வட்டி கொடுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு, கந்து வட்டி வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கோவையில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள் சிலர் அவசர தேவைக்காக வட்டிக்கு பணம் பெற்றுள்ள நிலையில், அவர்களின் ஏடிஎம் அட்டைகளை வாங்கி வைத்துக் கொண்டு கந்து வட்டி வசூலிப்போர் நிர்பந்தம் செய்து வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

கோவையில் பல குடும்பங்கள் இது போல கந்து வட்டி கும்பலிடம் சிக்கி உள்ள ன . அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...