கோவை, அக்டோபர் 30: கந்து வட்டி கும்பல் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி பாரத் சேனா அமைப்பினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

நெல்லையில் கந்து வட்டி கொடுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு, கந்து வட்டி வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கோவையில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள் சிலர் அவசர தேவைக்காக வட்டிக்கு பணம் பெற்றுள்ள நிலையில், அவர்களின் ஏடிஎம் அட்டைகளை வாங்கி வைத்துக் கொண்டு கந்து வட்டி வசூலிப்போர் நிர்பந்தம் செய்து வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
கோவையில் பல குடும்பங்கள் இது போல கந்து வட்டி கும்பலிடம் சிக்கி உள்ள ன . அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.