கோவை, அக்டோபர் 30: கோவை மதுக்கரை பகுதியில் வசிப்பவர் சையது இப்ராகிம். இவருக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவரது வீட்டின் அருகே 4 வயது சிறுமி வசித்து வந்தார். நேற்று மாலை சிறுமி திடீரென மாயமானார்.
தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடினர். அப்போது வீட்டின் அருகே சிறுமி மயங்கிக்கிடந்தது தெரியவந்தது. இது குறித்து விசாரித்தபோது அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது தெரியவந்தது.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சிறுவனிடம் விசாரணை நடத்திய போலீசார் அவரை சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பினர்.
4 வயது சிறுமிக்கு 13 வயது சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.