டெங்குவின் புகலிடமாகும் கலிக்கநாயக்கன்பாளைய கழிவுநீர் சாக்கடைகள்

கோவை, அக்டோபர் 29: டெங்கு மற்றும் அதன் விளைவுகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கோவை புறநகர் பகுதியான கலிக்கநாயக்கன்பாளையம் கிராமத்தில் சுகாதார சீர்கேட்டினால் இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது வேதனையளிப்பதாக அமைந்துள்ளது.



குப்பைத் தொட்டிகள் மற்றும் அசுத்தங்கள் நிறைந்த கழிவுநீர் சாக்கடைகள் போதிய பராமரிப்பின்றி திறந்த நிலையில் விடப்பட்டதே இதற்கு முக்கிய காரணம் என்கின்றனர் அப்பகுதி குடியிருப்பு வாசிகள். இதன் விளைவாக இக்கிராமத்தில் ஒன்பது வயது பெண் குழந்தைக்கு டெங்கு அறிகுறிகள் ஏற்பட்டு தற்போது கோவை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.



கலிக்கநாயக்கன்பாளையம், 6-வது வார்டு அண்ணா நகர் பகுதியில் உள்ள எஸ்.ஜோதிமணி (60) எனும் தனது தாத்தா வீட்டிற்கு மதுக்கரையில் இருந்து ஜே. சவுதிகா (6) வந்துள்ளார். அங்கு வசித்து வந்த அவருக்கு சில நாட்களில் காய்ச்சல் ஏற்படவே தொண்டாமுத்தூர் பகுதியில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சவுதிகாவிற்கு டெங்கு அறிகுறிகள் உள்ளன என்று தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, கோவை அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சவுதிகாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது சிகிச்சைக்குப் பின் சிறுமியின் உடல் நிலை முன்னேற்றம் அடைந்திருந்தாலும் அக்கிராமத்தில் இது முதல் டெங்கு பாதிப்பு என்பதால் உள்ளூர் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து, கலிக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த கே.எம்.பரதன் கூறுகையில், 'இப்பகுதியில் உள்ள சாக்கடைக் கால்வாய்களை முறையாக மூடி வைக்க அதிகாரிகள் தவறிவிட்டனர். மேலும், குப்பைத் தொட்டிகள் அமைக்கப்படாததால் பெரும்பாலான பிளாஸ்டிக் கழிவுகள் சாக்கடையிலேயே வீசப்படுகின்றன. இவை மொத்தமுமாக அடைக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. துப்புரவுப் பணியாளர்களும் உரிய நேரத்தில் இதனை சுத்தம் செய்வதில்லை. நகர் முழுவதும் டெங்கு உள்ளிட்ட உயிர்கொல்லி நோய்கள் பரவிவரும் சூழ்நிலையில் இங்கு அதிகளவிலாக டெங்கு கொசுகள் உருவாகி தற்போது ஒரு சிறுமி பாதிக்கப்பட்டுள்ளார்' என்றார்.



இதுகுறித்து கருத்துகேட்கும் வகையில் மாவட்ட நிர்வாக அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர்கள் தொடர்ந்து அழைப்பை புறக்கணித்தனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...