கோவை, அக்டோபர் 29: கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையை (கேஎம்சிஎச்) சேர்ந்த நுரையீரலியல் துறை நுரையீரல் நோய்களை குணப்படுத்துவதில் மட்டுமின்றி நுரையீரல் நோய் சிகிச்சைகளில் புதுமைகளை செய்வதிலும் தீவிரம் காண்பித்து வருகிறது.
ஏற்கனவே இந்த துறையில் பெற்றிருக்கும் அறிவை மேம்படுத்துவதற்காக கற்பித்தல் நிகழ்ச்சிகளை மருத்துவர்களுக்கு நடத்தியுள்ளது.
"TAPING 2017" என்பதும் அதுபோன்ற ஒரு முயற்சிதான். இந்த ஒரு நாள் நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 29) நடைபெற்றது. இதில், நுரையீரல் அறுவை சிகிச்சை மற்றும் பல்வேறு செயல்முறைகள் பற்றி கற்பிக்கப்பட்டன. நுரையீரல் மருத்துவர்களும் மற்றும் இந்த துறையில் முதுநிலை கல்வி பயின்றோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்தப் பயிலரங்கில் விலங்குகளின் திசுக்களை பயன்படுத்தி அவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது.

தோராக்கோஸ்கோபி என்பது உட்புற பரிசோதனை, பயாப்ஸி, மற்றும் பற்சிகர வளைவு மற்றும் தோராசிக் குழிக்குள்ளான நோய்களின் மருத்துவ செயல்முறை ஆகும். இதன் பரிசோதனை முறையானது, நுரையீரல் அறுவை சிகிச்சைக்கு மிகவும் பயன்படக் கூடிய மற்றும் பாதுகாப்பான சிகிச்சை முறை என்று மருத்துவர் எஸ். சாந்த குமார் மற்றும் மருத்துவர் ஜே.வேணுகோபால் தெரிவித்தனர்.
கருத்தரங்கில் உரையாற்றிய கேஎம்சிஎச் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் நல்ல ஜி. பழனிசாமி கூறியதாவது:- நுரையீரல் சிகிச்சை துறையில் தொடர்ந்து புதுமைகளை புகுத்துவதில் கேஎம்சிஎச் மருத்துவமனை பெருமைகொள்கிறது. நுரையீரல் இயல்துறையில் மருத்துவ அறிவை பகிர்ந்துகொள்ள இந்த கருத்தரங்கு பெரும்பங்காற்றியுள்ளது என்றார்.
ஏற்கனவே இந்த துறையில் பெற்றிருக்கும் அறிவை மேம்படுத்துவதற்காக கற்பித்தல் நிகழ்ச்சிகளை மருத்துவர்களுக்கு நடத்தியுள்ளது.
"TAPING 2017" என்பதும் அதுபோன்ற ஒரு முயற்சிதான். இந்த ஒரு நாள் நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 29) நடைபெற்றது. இதில், நுரையீரல் அறுவை சிகிச்சை மற்றும் பல்வேறு செயல்முறைகள் பற்றி கற்பிக்கப்பட்டன. நுரையீரல் மருத்துவர்களும் மற்றும் இந்த துறையில் முதுநிலை கல்வி பயின்றோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்தப் பயிலரங்கில் விலங்குகளின் திசுக்களை பயன்படுத்தி அவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது.

தோராக்கோஸ்கோபி என்பது உட்புற பரிசோதனை, பயாப்ஸி, மற்றும் பற்சிகர வளைவு மற்றும் தோராசிக் குழிக்குள்ளான நோய்களின் மருத்துவ செயல்முறை ஆகும். இதன் பரிசோதனை முறையானது, நுரையீரல் அறுவை சிகிச்சைக்கு மிகவும் பயன்படக் கூடிய மற்றும் பாதுகாப்பான சிகிச்சை முறை என்று மருத்துவர் எஸ். சாந்த குமார் மற்றும் மருத்துவர் ஜே.வேணுகோபால் தெரிவித்தனர்.
கருத்தரங்கில் உரையாற்றிய கேஎம்சிஎச் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் நல்ல ஜி. பழனிசாமி கூறியதாவது:- நுரையீரல் சிகிச்சை துறையில் தொடர்ந்து புதுமைகளை புகுத்துவதில் கேஎம்சிஎச் மருத்துவமனை பெருமைகொள்கிறது. நுரையீரல் இயல்துறையில் மருத்துவ அறிவை பகிர்ந்துகொள்ள இந்த கருத்தரங்கு பெரும்பங்காற்றியுள்ளது என்றார்.