உதகையில் 768 பேருக்கு பணி நியமன ஆணைகள்

நீலகிரி, அக்டோபர் 29: நீலகிரி மாவட்டம், உதகை எமரால்டு ஹைட்ஸ் பெண்கள் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 768 வேலைவாய்ப்பற்றோருக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பணிநியமன ஆணைகளை வழங்கினார்.



இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:- இந்த வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ள ஆர்வமுடன் வந்துள்ள இளைஞர்களை பார்க்கும்போது, மிகவும் சந்தோசமாக உள்ளது. இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களை அனைவரும் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதுபோன்ற ஒவ்வொரு முகாம்களை பயன்படுத்திக்கொண்டு வரும்போதுதான் நமக்கான வேலை நம்மை தேடி வரும். இந்த வேலைதான் செய்ய வேண்டும் என்று வீட்டிலேயே முடங்கினால் சந்தர்ப்பம் வரும்போது நாம் அதை இழக்க நேரிடும். வாய்ப்புகளை நீங்களே ஏற்படுத்திக்கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும்.

தற்போது டெங்கு நோயினை முழுவீச்சில் கட்டுப்படுத்த நமது தமிழக அரசு பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக அரசு எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருந்து, நமது வீட்டையும், நமது சுற்றத்தையும் தூய்மையாக வைத்து, டெங்கு போன்ற எந்தவித நோய்களும் வராமல் நம்மை நாமே காத்துக் கொள்ள வேண்டும்.

இம்முகாமில் மொத்தமாக 2073 பேர் கலந்து கொண்டு, அதில் 768 பேர் பல்வேறு தனியார் துறைகளில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டள்ளனர் என்றார். 

இம்முகாமில் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் ஒ.செ.ஞானசேகரன், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் செ.ரமேஷ் குமார், நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சி.சுப்ரமணியன் மற்றும் இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...