உதகையில் 768 பேருக்கு பணி நியமன ஆணைகள்

நீலகிரி, அக்டோபர் 29: நீலகிரி மாவட்டம், உதகை எமரால்டு ஹைட்ஸ் பெண்கள் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 768 வேலைவாய்ப்பற்றோருக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பணிநியமன ஆணைகளை வழங்கினார்.



இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:- இந்த வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ள ஆர்வமுடன் வந்துள்ள இளைஞர்களை பார்க்கும்போது, மிகவும் சந்தோசமாக உள்ளது. இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களை அனைவரும் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதுபோன்ற ஒவ்வொரு முகாம்களை பயன்படுத்திக்கொண்டு வரும்போதுதான் நமக்கான வேலை நம்மை தேடி வரும். இந்த வேலைதான் செய்ய வேண்டும் என்று வீட்டிலேயே முடங்கினால் சந்தர்ப்பம் வரும்போது நாம் அதை இழக்க நேரிடும். வாய்ப்புகளை நீங்களே ஏற்படுத்திக்கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும்.

தற்போது டெங்கு நோயினை முழுவீச்சில் கட்டுப்படுத்த நமது தமிழக அரசு பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக அரசு எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருந்து, நமது வீட்டையும், நமது சுற்றத்தையும் தூய்மையாக வைத்து, டெங்கு போன்ற எந்தவித நோய்களும் வராமல் நம்மை நாமே காத்துக் கொள்ள வேண்டும்.

இம்முகாமில் மொத்தமாக 2073 பேர் கலந்து கொண்டு, அதில் 768 பேர் பல்வேறு தனியார் துறைகளில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டள்ளனர் என்றார். 

இம்முகாமில் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் ஒ.செ.ஞானசேகரன், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் செ.ரமேஷ் குமார், நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சி.சுப்ரமணியன் மற்றும் இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...