கோவை, அக்டோபர் 29: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் முதன்மை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், டெங்கு ஒழிப்பு பணிகள் தொடர்பாக வருவாய் துறை, உள்ளாட்சித்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (அக்டோபர் 29) டெங்கு ஒழிப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் முன்னிலையில் தமிழக அரசின் முதன்மை செயலாளரும் வருவாய் நிர்வாக ஆணையருமான சத்யகோபால் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு அரசு டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளாக வருவாய்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் சுகாதாரத்துறை உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்து பல்வேறு பணிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. 50 வீடுகளுக்கு ஒரு டெங்கு ஒழிப்பு பணியாளரும், 500 வீடுகளுக்கு மருத்துவத்துறையை சார்ந்த அலுவலர்களும் தினந்தோறும் கள ஆய்வு மேற்கொண்டு குடியிருப்புகளில் உள்ள ஏடிஸ் லார்வாக்களை ஒழித்தும், கொசுப்புழு வளருவதற்கான காரணிகளை அழித்தும் வருகின்றனர்.

மேலும், ஒரு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ஒர் துணை ஆட்சியர் நிலையிலுள்ள அலுவலர்கள் மூலம் திடீர் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி, சுகாதாரத்துறையின் மூலமும், தன்னார்வலர்கள், பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் மூலமும் பொதுமக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது என முதன்மை செயலாளரும் வருவாய் நிர்வாக ஆணையருமான சத்யகோபால் தெரிவித்தார்.
முன்னதாக முதன்மை அவர், வடவள்ளி அண்ணா பல்கலைகழகத்தில் புதிய எளிமையான மற்றும் அதிக பயன்தரக்கூடிய முறையில் மரக்கன்று நடும் திட்டத்தினை தொடங்கி வைத்து, பி.என்.புதூர் பகுதியில் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், அப்பகுதியின் சுகாதாரம் குறித்தும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், சார் ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன், உதவி ஆட்சியர் சரண்யாஹரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி ஆகியோர் பங்கேற்றனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (அக்டோபர் 29) டெங்கு ஒழிப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் முன்னிலையில் தமிழக அரசின் முதன்மை செயலாளரும் வருவாய் நிர்வாக ஆணையருமான சத்யகோபால் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு அரசு டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளாக வருவாய்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் சுகாதாரத்துறை உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்து பல்வேறு பணிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. 50 வீடுகளுக்கு ஒரு டெங்கு ஒழிப்பு பணியாளரும், 500 வீடுகளுக்கு மருத்துவத்துறையை சார்ந்த அலுவலர்களும் தினந்தோறும் கள ஆய்வு மேற்கொண்டு குடியிருப்புகளில் உள்ள ஏடிஸ் லார்வாக்களை ஒழித்தும், கொசுப்புழு வளருவதற்கான காரணிகளை அழித்தும் வருகின்றனர்.

மேலும், ஒரு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ஒர் துணை ஆட்சியர் நிலையிலுள்ள அலுவலர்கள் மூலம் திடீர் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி, சுகாதாரத்துறையின் மூலமும், தன்னார்வலர்கள், பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் மூலமும் பொதுமக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது என முதன்மை செயலாளரும் வருவாய் நிர்வாக ஆணையருமான சத்யகோபால் தெரிவித்தார்.
முன்னதாக முதன்மை அவர், வடவள்ளி அண்ணா பல்கலைகழகத்தில் புதிய எளிமையான மற்றும் அதிக பயன்தரக்கூடிய முறையில் மரக்கன்று நடும் திட்டத்தினை தொடங்கி வைத்து, பி.என்.புதூர் பகுதியில் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், அப்பகுதியின் சுகாதாரம் குறித்தும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், சார் ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன், உதவி ஆட்சியர் சரண்யாஹரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி ஆகியோர் பங்கேற்றனர்.