உலக மார்பக புற்றுநோயிலிருந்து மீண்டோர் தினத்தையொட்டி, புற்றுநோயிலிருந்து மீண்டோர் சந்திப்பு

கோவை, அக்டோபர் 28: நகர்ப்புற இளம் பெண்களிடையே புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவது அச்சுறுத்தலாக உள்ளது. ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்ற நிலையில், இது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்துவது மட்டுமே சிறந்த தீர்வாக இருக்கும்.என்று ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் பி.குகன் கூறினார்.

புற்றுநோய், மனதில் ஆறாத ரணத்தையும், தாங்காத உளைச்சலையும் ஏற்படுத்தும். அப்படிப்பட்ட நோயிலிருந்து மீண்டு வந்தவர்கள், மறுபிறவி எடுத்தவர்கள் என்றேக் கூறலாம். இந்த நிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் சந்தித்து பேசுவதற்கான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

அந்த நிகழ்ச்சியில் புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் சந்தித்து தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர். 

இது தொடர்பாக டாக்டர் குகன் கூறியதாவது: இந்தியாவில் புற்றுநோய்க்கான அறிகுறிகள் தோன்றிய பின் தான் 50% புற்றுநோய்கள் கண்டறியப்படுகின்றன. 2012ம் ஆண்டு ஆய்வறிக்கையின்படி, அமெரிக்காவில் புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் 90%, ஆனால், இந்தியாவில் 60% மட்டுமே. இந்தியாவில், மார்பக புற்றுநோய் பற்றி பேசுவதும், விவாதிப்பதற்கும் இன்னும் தயக்கம் காட்டுகின்றனர். இது பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட வேண்டும்.



நகர்ப்புற இளம் பெண்களிடையே புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவது அச்சுறுத்தலாக உள்ளது. ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்ற நிலையில், இது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்துவது மட்டுமே சிறந்த தீர்வாக இருக்கும். எனவே, ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம், விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி வருகிறது. மருத்துவமனையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில், பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன அதோடு, http://bluetoothbreastcancer.com/ என்ற இணையத்தளத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு ஒலி வடிவத்தை பதவிறக்கம் செய்து சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்.

கடந்த 2003ம் ஆண்டு முதல் 15 ஆண்டுகளாக தீபம் திட்டத்தில் மார்பக புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து, தீர்வுகளை அளித்துள்ளோம். இதிலிருந்து குணமடைவதையும் மேம்படுத்தியுள்ளோம். மார்பக புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள், தங்கள் பட்ட வேதனையையும், மனக்குமறலையும் பகிர்ந்து ஆறுதல்பட்டனர். நோயிலிருந்து விடுபட்ட மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார். 

10 ஆண்டுகளுக்கு முன் மார்பக புற்றுநோயை கண்டறிந்து குணமாகிய பெண் ஒருவர் பேசுகையில், "புற்றுநோயை கண்டறிந்து விட்டால், வாழ்க்கை முடிந்து விட்டதாக எண்ணிவிடக் கூடாது, நிபுணத்துவமிக்கவர்களிடம் சரியான சிகிச்சை பெற்றால், இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியும்," என்றார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...