தண்டவாளப் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை - சேலம் இடையிலான ரயில் போக்குவரத்து நேரம் மாற்றம்

ரயில் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை - சேலம் மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை மாவட்டம் இருகூர் பகுதியில் உள்ள தண்டவாளங்கள் மற்றும் சிக்னல்களில் மேற்கொள்ளப்பட இருக்கும் பராமரிப்பு பணிகள் காரணமாக. அக்டோபர் 30-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை கோவை - சேலம் இடையிலான ரயில் போக்குவரத்து நேரம் மாற்றியமைக்கப்பட்டது. இதையறிந்து பயணிகள் அதற்கேற்றவாறு, பயணத்திட்டங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மாற்றியமைக்கப்பட்ட ரயில்களின் விபரம் பின்வருமாறு :- (அக்டோபர் 30-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை)

ரயில் எண் : 13352, அலப்பி தன்பாத் / டாடா எக்ஸ்பிரஸ் 70 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. 

ரயில் எண் : 12678, எர்ணாகுளம் பெங்களூரூ எக்ஸ்பிரஸ் 40 நிமிடங்கள் கோவையில் இருந்து தாமதமாக இயக்கப்படுகிறது. 

ரயில் எண் : 16859, சென்னை எக்மோர் மங்களூரூ எக்ஸ்பிரஸ் 20 நிமிடங்கள் இருகூரில் இருந்து தாமதமாக இயக்கப்படுகிறது. 

ரயில் எண் : 13351, தன்பாத் /  டாடா - அலப்பி எக்ஸ்பிரஸ் 20 நிமிடங்கள் இருகூரில் இருந்து தாமதமாக இயக்கப்படுகிறது. 

ரயில் எண் : 12677, பெங்களூரூ எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் 20 நிமிடங்கள் இருகூரில் இருந்து தாமதமாக இயக்கப்படுகிறது. 

ரயில் எண் : 12675, சென்னை சென்ட்ரல் கோயம்புத்தூர் கோவை எக்ஸ்பிரஸ் 55 நிமிடங்கள் ஈரோட்டில் இருந்து தாமதமாக இயக்கப்படுகிறது.

ரயில் எண் : 12676, கோயம்புத்தூர் சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் 55 நிமிடங்கள் ஈரோட்டில் இருந்து தாமதமாக இயக்கப்படுகிறது.    

   

ரயில் எண் : 12243, சென்னை சென்ட்ரல் கோயம்புத்தூர் சதப்தி எக்ஸ்பிரஸ் 40 நிமிடங்கள் சேலத்தில் இருந்து தாமதமாக இயக்கப்படுகிறது.    

   

இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...