சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள நீர்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டுகோள்

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள தரைமட்ட நீர் தேக்கம் ( sump) , மேல் நிலை நீர் தேக்கத் தொட்டிகளை Overhead tanks)  சுத்தம் செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியர் திரு.டி.என்.ஹரிஹரன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது, 

கோவை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள தரை மட்ட நீர் தேக்க தொட்டி மற்றும் மேல் நிலைநீர் தேக்க தொட்டிகளை கண்டிப்பாக சுத்தம் செய்தல் வேண்டும். அதற்கு ஏதுவாக இந்த இரு நாட்களில் மட்டும் மதியம் 02.00 மணிக்குமேல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

டெங்குவை கட்டுக்குள் வைப்பதற்கு தினந்தோறும் ஊரக வளர்ச்சித்துறை, பொதுசுகாதாரத்துறை அலுவலர்கள் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்திடும் வகையில் பணியாற்றி வருகின்றனர். மேலும், குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீரை சுகாதாரமாக சேமிக்கவும், சுகாதார முறைப்படி வீடுகளை பராமரிக்கவும் அனைத்து வீடுகளிலும் கொள்கலன்களில் அபேட் மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றது. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு காரணமான லார்வாக்களை அழிப்பதற்கு அபேட் மருந்துகளை தெளிக்கப்பட்டு வருகின்றது. மழைகாலங்களில் சுகாதார மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும். ஏனெனில் டெங்கு மற்றும் மலேரியா போன்ற தொற்று நோய் ஏற்படுவதை தடுக்க முடியும். நகர, மற்றும் கிராமப்பகுதிகளில் ஒவ்வொரு இடங்களாக பிரித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு அலுவலர்கள் அனைத்து வீடுகளிலும் ஆய்வு செய்து டெங்கு கொசு உற்பத்தியாகும் மூலங்களை கண்டறிய உதவி செய்வார்கள். மேலும் சுகாதாரதுறை அலுவலர்கள் வீட்டினை ஆய்வு செய்யும் போது தக்க ஒத்துழைப்பு வழங்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கோவை மாவட்டத்தை டெங்கு கொசு இல்லா மாவட்டமாக மாற்ற பொதுமக்கள் அனைவரும் இது தொடர்பாக எடுக்கும் நடவடிக்கைகளில் தங்களை முழு அளவில் அர்ப்பணித்து ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...