கோவையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு 4 பேர் பலி



கோவையில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. அதனால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில், இன்று மேலும் நான்கு பேர் பலியாகியுள்ளனர். 

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்த வினோத் சர்மா என்பவரது மகள் சுவாதி (24) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, சுவாதி அப்பகுதியில் உள்ள  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது ரத்த மாதிரிகளை பரிசோதித்த மருத்துவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். மேலும், நேற்று மாலை மருத்துவமனை நிர்வாகத்தால் அவரை காப்பாற்ற முடியாது என்றும் வீட்டிற்கு அழைத்துச்செல்லலாம் என்றும் கூறினர். 

தொடர்ந்து, சுவாதியின் பெற்றோர் அவரை வீட்டிற்கு அழைத்துச்சென்றனர். வீட்டிற்கு செல்லும் வழியியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பொள்ளாச்சியை சேர்ந்தவர் நாகப்பன். இவரது மகள் சந்தியா (10) காய்ச்சல் காரணமாக பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். 



இதே போல், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கருப்பசாமி (34) என்பவரும், தாராபுரம் பகுதியை சேர்ந்த சத்யா (27) என்பவரும் நேற்று கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...