சசிகுமார் கொலை குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மாநகர காவல் ஆணையரிடம் மனு

கோவையில் இந்து முன்னணி மாநகர செய்தி தொடர்பாளர் திரு.சசிகுமார் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். 

இது தொடர்பாக, துடியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு தற்போது வரையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், திரு.சசிகுமார் கொலையில் தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பரப்படுவதாகவும், அவ்வாறு வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியும் அவரது தம்பி திரு.தனபால் (35) இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். 

மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- 

எனது சகோதரர் கொலை செய்யப்பட்டதால் குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.

இந்த நிலையில், எனது சகோதரர் கொலை பல்வேறு முன்பகைகளின் காரணங்களால் நடைபெற்றது என்றும், எனது குடும்பத்தினரின் கவுரத்தை சீர்குலைக்கும் வகையிலும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. 

இதனை தடுத்து, அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...