கந்துவட்டி தொடர்பாக காவல் நிலயங்களில் புகார் பெற மறுத்தால் டி.எஸ்.பி.க்களிடம் புகார் அளிக்கலாம் - கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கோவை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் கந்து வட்டி தொடர்பான புகார்களை ஏற்க மறுத்தால் அந்தந்த காவல் எல்லைகளுக்கு  உட்பட்ட மாவட்ட துணை கண்காணிப்பாளர்களிடம் புகார் அளிக்கலாம் என்று  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர்.Pa.மூர்த்தி தெரிவித்துள்ளார். 

கந்துவட்டி கொடுமை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நெல்லை மாவட்ட ஆட்சியர் முன்பு  தீக்குளித்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இச்சம்பவத்தை தொடர்ந்து, கந்து வட்டி தொடர்பாக புகார்கள் வந்தால் உடனடியாக கடும் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டார். 

இதுதொடர்பாக, டாக்டர்.Pa.மூர்த்தி சிம்ப்ளி-சிட்டிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது :- 

நம் நாட்டில் கந்துவட்டி பிரச்சனை என்பது கடந்த 1500 ஆண்டுகளுக்கு   முன்பு இருந்தே வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. இதனால் பல குடும்பங்கள்  கொடுமைகளை அனுபவித்த கதைகளை  வரலாறு நமக்கு தெரியப்படுத்துகிறது. இன்னும் இந்தநிலை தொடர்ந்து கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது.  

கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்படும் மக்கள் தைரியமாக அருகில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்கலாம். இது தொடர்பாக புகார்கள் ஏதேனும் வந்தால் உடனடியாக புகார்களை பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து காவல்  நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சட்ட விதிமுறைகள் காரணமாக காவல் நிலையங்களில் கந்து வட்டி தொடர்பான புகார்களை ஏற்க மறுத்தால் உடனடியாக மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்களிடம் புகார் அளிக்கலாம்.  

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை காவல் எல்லைகள் 5 சரகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.பேரூர்,பெரியநாயக்கன்பாளையம், கருமத்தம்பட்டி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி என்று பிரிக்கப்பட்டுள்ள இந்த சரகங்களுக்கு தனித்தனியே துணை மாவட்ட காவல் கண்காளிப்பாளராகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்கலாம். அல்லது என்னிடம் புகார் தெரிவிக்கலாம். 

கந்துவட்டி தொடர்பாக  வரும் புகார்களின் பேரில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார். 

கோவை மாவட்ட  காவல் கண்காணிப்பாளர்  அலுவலக தொலைபேசி எண் : 0422-2300600

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...