முதியவரை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் அருகே முதியவரை கொலை செய்த வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை குண்டுவெடிப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

ஆர்.எஸ். புரத்தை அடுத்த பொம்ம நாயக்கன் வீதியில் வசிப்பவர் நடேசன். இவரது தந்தை ராமமூர்த்தி (62). இவர்களது வீட்டின் ஒரு பகுதியில் இருதயராஜா, பழனியம்மாள் (36) என்ற தம்பதியினர் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். கடந்த 2016 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பழனியம்மாளிடம், ராமமூர்த்தி வீட்டை காலி செய்யுமாறு கூறினார். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இந்த நிலையில், கோபமடைந்த பழனியம்மாள், ராமமூர்த்தியை கீழே தள்ளினார். இதில், தடுமாறிய அவர் அருகில் இருந்த சாக்கடையில் விழுந்தார். தலையில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ராமமூர்த்தி உயிரிழந்தார்.  

இது தொடர்பாக, ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனியம்மாளை கைது செய்தனர். இந்த வழக்கு இன்று (அக்.,25) கோவை குண்டுவெடிப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பழனியம்மாளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...