நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்த 4 பேரும் பலி - அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்


நெல்லையில் கந்துவட்டி கொடுமைக்கு 4 பேர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் விடுத்து உள்ளது.

நெல்லை மாவட்டம் அச்சன்புதூர் அருகில் உள்ள காசி தர்மத்தை சேர்ந்த இசக்கிமுத்து, அவருடைய மனைவி சுப்புலட்சுமி மற்றும் 2 மகள்களுடன் கடந்த திங்கட்கிழமை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து தீக்குளித்தனர். படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நால்வரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

கந்து வட்டிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க தவறிய மாவட்ட ஆட்சியர், போலீஸ் அதிகாரிகளை மாற்றக்கோரியும் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், கந்துவட்டி கொடுத்தவர்களின் கொடுமை மற்றும் போலீஸ் நடவடிக்கை எடுக்காமை காரணமாக 4 பேர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பதில் அளிக்க கோரி தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் விடுத்து உள்ளது. தமிழக தலைமை செயலாளர், டிஜிபி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி.க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது, இன்னும் 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...