கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு அனுமதியானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு கடந்த இரு மாதங்களில் மட்டும் தனியார் மற்றும் அரசு பொது மருத்துவமனையில் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில், டெங்கு காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை அரசு பொது மருத்துவமனையில் 28 ஆண்கள், 23 பெண்கள் மற்றும் 10 ஆண், 7 பெண் குழந்தைகள் என மொத்தம் 68 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். மேலும், காய்ச்சல் காரணமாக 180 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு தனிவார்டு ஒதுக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக இருப்பிட மருத்துவ அலுவலர் சவுந்திரவேல் தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கோவை அரசு பொது மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதித்த 49 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் தற்போது 68 ஆக எண்ணிக்கை உயர்ந்திருப்பது கோவையில் டெங்குவின் தாக்கம் அதிகரித்து வருவதை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...