பணம் பெற்றுக்கொண்டு திரும்பத் தராமல் மிரட்டுவதாகக் கூறி பெண் ஒருவர் தனது 3 குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
கோவை நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கதுரை என்பவரது மனைவி மணிபிரியா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த திலகவதி என்பவருக்கு இடம் விற்ற பணம் 4 லட்சம் ரூபாயை கைமாறாக கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் திரும்பக் கேட்ட போது திலகவதி மற்றும் அவரது மகன் ஆகியோர் பணத்தை திரும்ப கொடுக்க மறுத்ததாகவும், குண்டர்கள் சிலரை வைத்து கூடுதலாக 2 லட்சம் ரூபாய் கொடுக்குமாறு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இழந்த பணத்தை மீட்டுத்தர வேண்டும் மற்றும் மிரட்டல் விடுபவர்களிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் தனது குழந்தைகள் மூவருடன் வந்து மனு அளித்தார்.
கந்து வட்டி விவகாரத்தில் நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தீக்குளித்து இரு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தற்போது கோவை ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கதுரை என்பவரது மனைவி மணிபிரியா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த திலகவதி என்பவருக்கு இடம் விற்ற பணம் 4 லட்சம் ரூபாயை கைமாறாக கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் திரும்பக் கேட்ட போது திலகவதி மற்றும் அவரது மகன் ஆகியோர் பணத்தை திரும்ப கொடுக்க மறுத்ததாகவும், குண்டர்கள் சிலரை வைத்து கூடுதலாக 2 லட்சம் ரூபாய் கொடுக்குமாறு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இழந்த பணத்தை மீட்டுத்தர வேண்டும் மற்றும் மிரட்டல் விடுபவர்களிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் தனது குழந்தைகள் மூவருடன் வந்து மனு அளித்தார்.
கந்து வட்டி விவகாரத்தில் நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தீக்குளித்து இரு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தற்போது கோவை ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.