பணம் பெற்றுக்கொண்டு திரும்பத் தராமல் மிரட்டுவோர் மீது நடவடிக்கை கோரி மனு

பணம் பெற்றுக்கொண்டு திரும்பத் தராமல் மிரட்டுவதாகக் கூறி பெண் ஒருவர் தனது 3 குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

கோவை நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கதுரை என்பவரது மனைவி மணிபிரியா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த திலகவதி என்பவருக்கு இடம் விற்ற பணம் 4 லட்சம் ரூபாயை கைமாறாக கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் திரும்பக் கேட்ட போது திலகவதி மற்றும் அவரது மகன் ஆகியோர் பணத்தை திரும்ப கொடுக்க மறுத்ததாகவும், குண்டர்கள் சிலரை வைத்து கூடுதலாக 2 லட்சம் ரூபாய் கொடுக்குமாறு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இழந்த பணத்தை மீட்டுத்தர வேண்டும் மற்றும் மிரட்டல் விடுபவர்களிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் தனது குழந்தைகள் மூவருடன் வந்து மனு அளித்தார்.

கந்து வட்டி விவகாரத்தில் நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தீக்குளித்து இரு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தற்போது கோவை ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...