கோவை விமான நிலையம் சார்பில், வான்வழி வர்த்தக மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பீளமேடு அருகே உள்ள சித்ரா பகுதியில் கோவை விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விமானங்கள் வந்து செல்கின்றன. மேலும், கோடிக்கணக்கான ரூபாய் அளவில் வர்த்தகமும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கோவை விமான நிலையம் சார்பில் ”வான்வழி வர்த்தக மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பது” குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், கோவை விமான நிலையத் தலைவர் நாராயணன் கலந்து கொண்டு, வான்வழி வர்த்தக மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் கூறுகையில், கோவை விமான நிலையத்தில் உள்ள வசதிகளின் மூலம் அண்டை மாவட்டங்களிலும் தொழில் மேம்படைகின்றன.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்யும் சரக்குகளை எவ்வாறு கையாள்வது, சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஆவணங்களை சரிபார்த்து விரைவில் அந்தந்த தொழில்சாலைகளுக்கு கொண்டு செல்வது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டதாகக் கூறினார்.
இது தொடர்பாக ஏ.ஏ.ஐ. சரக்கு போக்குவரத்து மற்றும் கூட்டு சேவைகள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேகு கேஜ்டெர் கூறுகையில், தங்களது நிறுவனமானது, நாட்டில் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் பணியினை தொழிலதிபர்களுக்கு எளிதாக்குகிறது. சரக்குகளை தானியங்கி மூலம் இயக்கும் நடைமுறை வரும் நவம்பர் மாதம் இறுதிக்குள் கோவை விமான நிலையத்தில் கொண்டுவரப்படுகிறது. இது தொழில்நிறுவனங்களுக்கு பெரிதும் பயனளிக்கும்.
மேலும், ஒரு சில வகை சரக்குகளை எடுத்து வர விமான ஓடுபாதையை அகலப்படுத்த வேண்டும். இருநகரங்களுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்களின் அடிப்படையில் பயணிகள் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவை பொறுத்தவரையில் சரக்கு விமானப் போக்குவரத்தில் கட்டுப்பாடுகளின்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அண்மையில் கோவை, தில்லி, மற்றும் சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இயக்குவதாக அறிவித்துள்ளது. இதேபோல, மேலும் பல விமான சேவைகளை உருவாக்க வேண்டும் என தொழில்நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
பீளமேடு அருகே உள்ள சித்ரா பகுதியில் கோவை விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விமானங்கள் வந்து செல்கின்றன. மேலும், கோடிக்கணக்கான ரூபாய் அளவில் வர்த்தகமும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கோவை விமான நிலையம் சார்பில் ”வான்வழி வர்த்தக மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பது” குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், கோவை விமான நிலையத் தலைவர் நாராயணன் கலந்து கொண்டு, வான்வழி வர்த்தக மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் கூறுகையில், கோவை விமான நிலையத்தில் உள்ள வசதிகளின் மூலம் அண்டை மாவட்டங்களிலும் தொழில் மேம்படைகின்றன.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்யும் சரக்குகளை எவ்வாறு கையாள்வது, சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஆவணங்களை சரிபார்த்து விரைவில் அந்தந்த தொழில்சாலைகளுக்கு கொண்டு செல்வது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டதாகக் கூறினார்.
இது தொடர்பாக ஏ.ஏ.ஐ. சரக்கு போக்குவரத்து மற்றும் கூட்டு சேவைகள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேகு கேஜ்டெர் கூறுகையில், தங்களது நிறுவனமானது, நாட்டில் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் பணியினை தொழிலதிபர்களுக்கு எளிதாக்குகிறது. சரக்குகளை தானியங்கி மூலம் இயக்கும் நடைமுறை வரும் நவம்பர் மாதம் இறுதிக்குள் கோவை விமான நிலையத்தில் கொண்டுவரப்படுகிறது. இது தொழில்நிறுவனங்களுக்கு பெரிதும் பயனளிக்கும்.
மேலும், ஒரு சில வகை சரக்குகளை எடுத்து வர விமான ஓடுபாதையை அகலப்படுத்த வேண்டும். இருநகரங்களுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்களின் அடிப்படையில் பயணிகள் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவை பொறுத்தவரையில் சரக்கு விமானப் போக்குவரத்தில் கட்டுப்பாடுகளின்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அண்மையில் கோவை, தில்லி, மற்றும் சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இயக்குவதாக அறிவித்துள்ளது. இதேபோல, மேலும் பல விமான சேவைகளை உருவாக்க வேண்டும் என தொழில்நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.