கோவையில் வாலிபர் வெட்டிக்கொலை: போலீஸ் விசாரணை

கோவை அருகே வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேதுராமன் (22). ரியல் எஸ்டேட் புரோக்கரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குளத்தூர் தட்டான் தோட்டம் என்ற பகுதியில் வாடகைக்கு குடியேறியுள்ளார். 

அவருடன் அவரது நண்பரும் நல்லாம்பாளையத்தைச் சேர்ந்தவருமான கரிகாலன் (31) என்பவரும் தங்கியிருந்தார். 

இந்த நிலையில், சேதுராமன் வீட்டில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் சுகுமார், சேதுராமனை பார்க்கச்சென்ற போது அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இது தொடர்பாக சுகுமார், சூலூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, சேதுராமன் தங்கி இருந்த அறையில் கஞ்சா பொட்டலங்கள் கண்டறியப்பட்டது. மேலும், அவர் கொலை செய்யப்பட்ட போது ஒரு பெண் அறையில் இருந்து தப்பியோடியதாகவும் தெரிகிறது. 

எனவே பெண் தகராறில் சேதுராமன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார் சேதுராமனுடன் உடனிருந்த கரிகாலனை தேடி வருகின்றனர். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...