கோவையில் சுகாதாரமற்ற வீடுகள் மற்றும் கடைகளுக்கு இதுவரை சுமார் ரூ.6 லட்சம் அபராதம் விதிப்பு


தமிழக அரசின் உத்தரவின்படி, டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்காக, டெங்கு தடுப்பு பணிகளின் கண்காணிப்பு அதிகாரி ஹர்மந்தர் சிங் தலைமையில் கோவை மாநகராட்சி சார்பாக பல்வேறு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதன்படி இன்று (அக்.,23) கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட, தர்ஷினி நகர், கணபதி, வயலட் மெட்ரிக்குலேசன் பள்ளி, ஜி.என்.மில்ஸ், சுவாதி பூங்கா, சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்து டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகுவதற்கு காரணமான பள்ளிகள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ரூ.23,500 அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும், நீர் தேங்கிய இடங்கள் மற்றும் குப்பைகூளங்களை உடனடியாக அகற்றி சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கு மண்டலத்திற்குட்பட்ட, மருதமலை ரோடு, வடவள்ளி, சின்மயா மெட்ரிக்குலேசன் பள்ளி வடவள்ளி, கவுண்டம்பாளையம், சரவணா நகர், வி.ஓ.சி நகர், டி.வி.எஸ் நகர், ஸ்ரீ பாலாஜி வித்யா மந்திர் வீரகேரளம், சீரநாயக்கன்பாளையம், காமராஜபுரம், ஆர்.எஸ்.புரம், வேலாண்டிபானையம், காந்திநகர், எஸ்.என்.பாளையம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்து டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமான பள்ளிகள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ரூ.30,500 அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.

தெற்கு மண்டலத்திற்குட்பட்ட ஆறுமுக உதயர் வீதி, தெலுங்குப்பாளையம், சொக்கம்புதூர், பிரபா டிரேடர்ஸ், கே.வி.பாளையம், போத்தனூர், மோகன் நகர், சுந்தராபுரம், மோகன் நகர் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்து டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமான பள்ளிகள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ரூ.53,000- அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. 

மத்திய மண்டலத்திற்குட்பட்ட காந்திபுரம், புலியகுளம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்து டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமான பள்ளிகள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ரூ.15,000- அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டு, நீர் தேங்கிய இடங்கள் மற்றும் குப்பைகூளங்களை உடனடியாக அகற்றி சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் 22-ம் தேதி வரை டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமான வீடுகள், பள்ளிகள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மாநகராட்சி மூலம் மொத்தம் ரூ.4,89,000 அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இன்று (அக்.,23) மேற்கொண்ட டெங்கு தடுப்பு பணிகளின் போது ரூ.1,22,000 அபராதம் விதிக்கப்பட்டது. கோவை மாநகராட்சி பகுதிகளில் இதுவரை ரூ.6,11,000 அபராதம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மாநகராட்சியின் டெங்கு தடுப்பு பணிகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், பொதுமக்கள் அனைவரும் மாநகராட்சியின் டெங்கு தடுப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறும் மாநகராட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...