நீலகிரியில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து போலீஸார் விழிப்புணர்வு பிரச்சாரம்

நீலகிரி மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வை போலீஸார் ஏற்படுத்தினர்.

குன்னூரில் இருந்து உதகை செல்லும் சாலையில் கேத்தி பகுதியில் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா அறிவுரையின்படி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பிரச்சாரத்தில் போலீஸார் ஈடுபட்டனர்.

உதகை காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் அவர்களின் உத்தரவின் பேரில், கேத்தி காவல் துணை ஆய்வாளர்கள் சிக்கந்தர் மற்றும் ஷர்புத்தீன் ஆகியோர் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வின் போது, இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு  சாலை விதிமீறல் குறித்து விளக்கினார்கள். அதிவேகமாக பயணித்தல், குடிபோதையில் வாகனம் இயக்குதல், அதிகபாரம் ஏற்றுதல், வாகனம் ஓட்டும் போது தொலைப்பேசி பயன்படுத்துதல், சாலை விதிகளை மீறுதல், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுதல் ஆகியவை செய்தால் அந்த வாகன ஓட்டியின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...