உதகையில் அன்புச்சுவர் உதவி மையத்தை திறந்து வைத்தார் மாவட்ட ஆட்சியர்

நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையம் அம்மா உணவகம் அருகில் இன்று (அக்.,23) நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள அன்புச் சுவர் உதவி மையத்தை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.



 அப்போது அவர் கூறியதாவது, இந்த அன்புச்சுவர் உதவி மையமானது மனிதாபிமானம் மற்றும் பகிர்ந்து வாழும் பண்பை வளர்க்கும் வகையில்  துவக்கப்பட்டு உள்ளது   தமிழகத்தில் முதன்முதலாக திருநெல்வேலி மாவட்டத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று உதகையில் தொடங்கப்பட்டுள்ளது. 

செல்வந்தர்கள் மற்றும் உதவி செய்யும் மனம் படைத்தவர்கள் தங்களிடம் நல்ல நிலையில் உள்ள ஆடைகள், காலணிகள் உட்பட இதர பயனுள்ள மக்களுக்கு பயன்படும் அனைத்து பொருட்களையும் கொண்டு வைக்கும்படி தெரிவிக்கப்படுகிறது. பொருட்களை வாங்க முடியாமல் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையில் வந்து எடுத்து சென்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன், உதகை கோட்டாட்சியர் சிவகாமி, நகராட்சி ஆணையர்(பொ) ரவி, சமூக நலத்துறை அலுவலர் தேவகுமாரி, உதகை வட்டாட்சியர் மகேந்திரன், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...