வால்பாறை பகுதியில் கடந்த சில மாதங்களாக பொது மக்களின் குடியிருப்பு பகுதிகளில் நுழையும் காட்டு யானைகள் வீடுகளையும், உடமைகளையும் சேதப்படுத்தி வருகின்றது.
இந்நிலையில் கடந்த வாரம் பன்னிமேடு அருகே உள்ள சங்கிலிரோடு எஸ்டேட் பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் அப்பகுதியில் இருந்த நான்கு பங்களாக்களை சேதப்படுத்தியதுடன் வீட்டில் இருந்த தொலைக்காட்சி, கட்டில், பீரோ ஆகியவற்றை சேதப்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்த காட்டு யானைகள் நேற்று இரவு நல்லமுடி பகுதியில் வனத்துறை பயிற்சி மையத்தின் நான்கு சுவர்களையும் இடித்து அங்கிருந்த மேசை, நாற்காலி ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தியது.

பின், சம்பவ இடத்தில் திரண்ட வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் கூச்சலிட்டும், தீப்பந்தங்களைக் கொண்டும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

காட்டு யானைகள் கொண்ட கூட்டம் குடியிருப்புகளின் அருகாமையில் உள்ள வனப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளதால் எந்நேரத்தில் வேண்டுமானாலும் மீண்டும் குடியிருப்புகளுக்குள் நுழையலாம் என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம் பன்னிமேடு அருகே உள்ள சங்கிலிரோடு எஸ்டேட் பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் அப்பகுதியில் இருந்த நான்கு பங்களாக்களை சேதப்படுத்தியதுடன் வீட்டில் இருந்த தொலைக்காட்சி, கட்டில், பீரோ ஆகியவற்றை சேதப்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்த காட்டு யானைகள் நேற்று இரவு நல்லமுடி பகுதியில் வனத்துறை பயிற்சி மையத்தின் நான்கு சுவர்களையும் இடித்து அங்கிருந்த மேசை, நாற்காலி ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தியது.

பின், சம்பவ இடத்தில் திரண்ட வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் கூச்சலிட்டும், தீப்பந்தங்களைக் கொண்டும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

காட்டு யானைகள் கொண்ட கூட்டம் குடியிருப்புகளின் அருகாமையில் உள்ள வனப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளதால் எந்நேரத்தில் வேண்டுமானாலும் மீண்டும் குடியிருப்புகளுக்குள் நுழையலாம் என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.