வால்பாறை அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள், நான்கு வீடுகளை சூறையாடின.

வால்பாறை அருகே பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. பன்னிமேடு, சங்கிலிரோடு எஸ்டேட் பகுதியில் தொடர்ந்து கடந்த ஒரு வாரகாலமாக 6 யானைகள் கொண்ட கூட்டம் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளன. இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து, ரேஷன் கடை, சத்துணவுக்கூடம், தொழிலாளர்கள் குடியிருப்பு போன்றவற்றை இடித்து சேதப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், நேற்று (அக்.,18) நள்ளிரவு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த 6 யானைகள் கொண்ட கூட்டம் அப்பகுதியில் காந்தி, மூர்த்தி, கெபீர், சக்திவேல் ஆகியோர் குடியிருந்த பங்களாவின் ஜன்னல் கதவுகளை உடைத்து குட்டி யானை வீட்டிற்குள்ளே புகுந்து, வீட்டில் இருந்த பாத்திரங்கள், கட்டில், பீரோ, தொலைக்காட்சி ஆகியவற்றை சேதப்படுத்தியது.

வீட்டின் பின்புறமாக தப்பிச்சென்ற காந்தி என்பவர் அருகிலிருந்த பொதுமக்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உதவிக்கு அழைத்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டடப்பட்டது. இதனிடையே, தங்களுக்கு காட்டு யானைகளிடமிருந்து பாதுகாப்பு வழங்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தொடர்ந்து ஒருவாரமாக முகாமிட்டுள்ள காட்டு யானைகளை கும்கி யானை உதவியுடன் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


வால்பாறை அருகே பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. பன்னிமேடு, சங்கிலிரோடு எஸ்டேட் பகுதியில் தொடர்ந்து கடந்த ஒரு வாரகாலமாக 6 யானைகள் கொண்ட கூட்டம் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளன. இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து, ரேஷன் கடை, சத்துணவுக்கூடம், தொழிலாளர்கள் குடியிருப்பு போன்றவற்றை இடித்து சேதப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், நேற்று (அக்.,18) நள்ளிரவு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த 6 யானைகள் கொண்ட கூட்டம் அப்பகுதியில் காந்தி, மூர்த்தி, கெபீர், சக்திவேல் ஆகியோர் குடியிருந்த பங்களாவின் ஜன்னல் கதவுகளை உடைத்து குட்டி யானை வீட்டிற்குள்ளே புகுந்து, வீட்டில் இருந்த பாத்திரங்கள், கட்டில், பீரோ, தொலைக்காட்சி ஆகியவற்றை சேதப்படுத்தியது.

வீட்டின் பின்புறமாக தப்பிச்சென்ற காந்தி என்பவர் அருகிலிருந்த பொதுமக்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உதவிக்கு அழைத்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டடப்பட்டது. இதனிடையே, தங்களுக்கு காட்டு யானைகளிடமிருந்து பாதுகாப்பு வழங்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தொடர்ந்து ஒருவாரமாக முகாமிட்டுள்ள காட்டு யானைகளை கும்கி யானை உதவியுடன் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
