தொலைதூர கிராமங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது- மாவட்ட ஆட்சியர்

மாவட்டத்தின் தொலைதூர கிராமங்களில் நடமாடும் மருத்துவமுகாம்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கள்ளப்பாளையம் ஊராட்சி சின்னகுயிலி கிராமத்தில் இன்று (அக்டோபர் 16) ஒவ்வொரு வீடு வீடாக சென்று டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பொதுமக்களிடத்தில் தெரிவித்ததாவது:-

கோவை மாவட்ட நிர்வாகம் மழைகாலங்களில் உண்டாகக்கூடிய தொற்றுநோய்கள் மற்றும் காய்ச்சல்களை கவனமுடன் கையாண்டு நிவர்த்தி செய்து வருகின்றது. டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய ஏடிஸ் லார்வாக்களை ஒழிக்கும் பணியும் மாவட்டம் முழுவதிலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

டெங்கு காய்ச்சல் எளிதில் குழந்தைகளை கட்டுப்படுத்தும் என்பதனால் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் வகையில் நிலவேம்பு குடிநீர் அனைத்து அங்கன்வாடி மையங்கள், பள்ளிகளிகள் ஒவ்வொரு மாதத்தின் முதல் 5 தினங்களில் கட்டாயமாக வழங்கப்பட்டு வருகின்றது.



மேலும், பொதுமக்கள் அதிகம் செல்லும் இடங்களிலும், மாநகராட்சி சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பேருந்து நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்கள், அம்மா உணவகங்களிலும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும், தொலைதூர கிராமங்களிலும் நடமாடும் மருத்துவமுகாம்கள் மூலம் தொடர் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.



சுகாதார பணியாளர்கள் மூலம் வாரந்தோறும் அனைத்து வீடுகளிலும் ஏடிஸ் கொசுப்புழு வளரும் சூழல் உள்ள இடங்களாக அறியப்படும், மேல்நிலை மற்றும் கீழ்நிலைத் தொட்டிகள், திறந்த டிரம்கள் ஆகியவற்றில் கொசுப்புழுக்களை கண்டறிந்து அழித்து வருகின்றனர். மேலும் உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள், தேவையற்ற ஆட்டுக்கல் போன்றவற்றையும் கண்டறிந்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...