கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க. விஜயகார்திகேயன் சுற்றுப்புரத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்தினார்.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், 3-வது வார்டுக்குட்பட்ட மகாலட்சுமி லே அவுட், சுப்ரமணியம்பாளையம் பகுதியில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், காந்தி நகர் மற்றும் என்.பி.சி.நகர் பகுதிகளில் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதையும் மாநகராட்சி ஆணையர் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, மகாலட்சுமி லே அவுட், சுப்ரமணியம்பாளையம் பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தற்போது நலமாக உள்ள மாணவர் சாம்ராட் என்பவரை அவர் சந்தித்து நலம் விசாரித்தார். பின், டெக்ஸ்மோ கம்பெனி வளாகங்களில் டெங்கு கொசு உருவாவதற்கான காரணிகள் ஏதும் உள்ளனவா என்று ஆய்வு செய்து சுற்றுப்புரத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் உத்தரவிட்டார்.

இதனையடுத்து, சத்யா நகரில் சுமார் 25 சென்ட் அளவிலான மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடத்தை அவர் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், வடக்கு மண்டல உதவி ஆணையர் சரவணன் உடனிருந்தனர்.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், 3-வது வார்டுக்குட்பட்ட மகாலட்சுமி லே அவுட், சுப்ரமணியம்பாளையம் பகுதியில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், காந்தி நகர் மற்றும் என்.பி.சி.நகர் பகுதிகளில் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதையும் மாநகராட்சி ஆணையர் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, மகாலட்சுமி லே அவுட், சுப்ரமணியம்பாளையம் பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தற்போது நலமாக உள்ள மாணவர் சாம்ராட் என்பவரை அவர் சந்தித்து நலம் விசாரித்தார். பின், டெக்ஸ்மோ கம்பெனி வளாகங்களில் டெங்கு கொசு உருவாவதற்கான காரணிகள் ஏதும் உள்ளனவா என்று ஆய்வு செய்து சுற்றுப்புரத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் உத்தரவிட்டார்.

இதனையடுத்து, சத்யா நகரில் சுமார் 25 சென்ட் அளவிலான மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடத்தை அவர் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், வடக்கு மண்டல உதவி ஆணையர் சரவணன் உடனிருந்தனர்.