மாநகராட்சியின் பல்வேறு பணிகள் குறித்து 3-வது வார்டு பகுதியில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க. விஜயகார்திகேயன் சுற்றுப்புரத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்தினார்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், 3-வது வார்டுக்குட்பட்ட மகாலட்சுமி லே அவுட், சுப்ரமணியம்பாளையம் பகுதியில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், காந்தி நகர் மற்றும் என்.பி.சி.நகர் பகுதிகளில் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதையும் மாநகராட்சி ஆணையர் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதனைத்தொடர்ந்து, மகாலட்சுமி லே அவுட், சுப்ரமணியம்பாளையம் பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தற்போது நலமாக உள்ள மாணவர் சாம்ராட் என்பவரை அவர் சந்தித்து நலம் விசாரித்தார். பின், டெக்ஸ்மோ கம்பெனி வளாகங்களில் டெங்கு கொசு உருவாவதற்கான காரணிகள் ஏதும் உள்ளனவா என்று ஆய்வு செய்து சுற்றுப்புரத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் உத்தரவிட்டார்.



இதனையடுத்து, சத்யா நகரில் சுமார் 25 சென்ட் அளவிலான மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடத்தை அவர் ஆய்வு செய்தார்.



இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், வடக்கு மண்டல உதவி ஆணையர் சரவணன் உடனிருந்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...