உடுமலை, பொன்னேரி பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதியினை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
உடுமலைக்கு உட்பட்ட பொன்னேரி பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று (நேற்று) கன மழை பெய்து மழை நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதுகுறித்து தகவலறிந்த கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் இன்று (ஞாயிறு) அப்பகுதியில் நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது, அப்பகுதி மக்கள், கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவிற்கு தற்போது மழை பெய்துள்ளதாகவும், இதனால் குடியிருப்புகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரிடம் புகார் அளித்தனர்.
தொடர்ந்து, பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்ற அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
உடுமலைக்கு உட்பட்ட பொன்னேரி பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று (நேற்று) கன மழை பெய்து மழை நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதுகுறித்து தகவலறிந்த கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் இன்று (ஞாயிறு) அப்பகுதியில் நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது, அப்பகுதி மக்கள், கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவிற்கு தற்போது மழை பெய்துள்ளதாகவும், இதனால் குடியிருப்புகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரிடம் புகார் அளித்தனர்.
தொடர்ந்து, பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்ற அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.