"தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் திருட்டு சம்பவங்களை தடுக்க தனிப்படை"

பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பிக்பாக்கெட் மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் தெரிவித்துள்ளார்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் புதிய ஆடைகள் மற்றும் பட்டாசுகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில் பண்டிகை காலங்களில் புத்தாடைகள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்குவதற்கு டவுன்ஹால் மற்றும் காந்திபுரம் ஆகிய பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

அவ்வாறு திரளும் மக்களிடம் மர்ம நபர்கள் சிலர் பிக்பாக்கெட் மற்றும் செயின் பறிப்பு போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக கோவை மாநகர குற்றபிரிவு துணை ஆணையர் பெருமாள் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியதாவது :- ஒரு தனிப்படையில் ஆறு போலீசார் வீதம் மொத்தம் இரண்டு தனிப்படையில் 12 போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சாதராண பொதுமக்கள் போல உடையணிந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருவார்கள். இதன்மூலம், திருட்டு சம்பங்களில் ஈடுபடுபவர்களை கையும் களவுமாக பிடிக்க முடியும். 

இதேபோல, கோவை மாநகரில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபடுபவர்களை பிடிக்க நான்கு பேர் கொண்ட தனிப்படையும், இரு சக்கர வாகனங்களை திருடுபவர்களை பிடிப்பதற்கு மூன்று பேர் கொண்ட தனிப்படையும், செயின் பறிப்பில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்கு ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. அத்தனை தனிப்படை போலீஸார்களும் மாநகரில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். என்று அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...