வால்பாறையில் உள்ள தேயிலை தோட்டங்களில் காட்டு யானைகளின் அட்டகாசம்



கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பல தேயிலைத் தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் செய்த யானைகளை வனப்பகுதியில் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

வால்பாறை அடுத்துள்ள பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் நேற்று (அக்..13) இரவு சுமார் 12 மணியளவில் 6 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து  வீடுகளை சேதப்படுத்தியது. குடியிருப்புவாசிகள் குணசேகரன், வேலன், செல்லத்துரை, மேகலா, மாரியாயி, முத்துலட்சுமி ஆகியோரின் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து உள்ளே சென்று அட்டகாசம் செய்துள்ளன  . மேலும், வீட்டில் இருந்த கட்டில், பீரோ, பாத்திரங்கள், டி.வி, மிக்சி, உள்ளிட்ட பொருட்களையும் யானைகள் நாசப்படுத்தின. 



வீட்டில் இருந்தவர்கள் குழந்தைகளுடன் பின் வாசல் வழியாக தேயிலைக்காட்டிற்குள் தஞ்சமடைந்து கைபேசியின் மூலமாக அக்கம் பக்கத்தினர்களின் உதவியை நாடினர். பின்னர், விடிய, விடிய காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். இருப்பினும், அவைகளை விரட்ட முடியவில்லை.  தொடர்ந்து, யானைகள் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் முகாமிட்டுள்ளன.  இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.



வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் தொடர்ந்து அட்டசாகம் செய்து வருவதாகவும், இது தொடர்பாக புகார் அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர்.  அண்மையில், கருமலை பகுதியில் வேல்சாமி என்பவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,  காட்டு யானைகளை, கும்கி யானைகளை வைத்து விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...