குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது சிறப்பு நீதிமன்றம்

குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது சிறப்பு நீதிமன்றம்

கோவையில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை குண்டுவெடிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த வாசீம் என்பவர்  தனது மனைவி ஜோஹரமா மற்றும் மகள் அன்ஃபியா, மகன் பர்ஹான் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். ஏற்கனவே, குடும்ப பிரச்சினை நிலவி வந்த சூழலில், கடந்த 2015ம் ஆண்டு தனது மனைவி ஜோஹரமாவை, வாசிம் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு கோவை குண்டுவெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இந்த வழக்கில் அரசு தரப்பில் 14 சாட்சியங்களும், 7 வயது மகள் முக்கிய சாட்சியாகவும் விசாரிக்கப்பட்டனர்., வழக்கின் விசாரணை நிறைவுபெற்ற நிலையில், இன்று (அக்.,14) தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, குற்றவாளி வாசீமிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி குணசேகரன்  தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து, குற்றவாளி வாசீம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...