கோவை மாவட்டத்தில் 2017-18ம் ஆண்டிற்கு உணவு உற்பத்தி இலக்கு 91200 மெட்ரிக் டன் நிர்ணயம்- வேளாண்மைத்துறை இயக்குநர் தகவல்

கோவை மாவட்டத்தில் 2017-18ம் ஆண்டிற்கு உணவு உற்பத்தி இலக்கு 91200 மெட்ரிக் டன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தமிழக வேளாண்மைத் துறை இயக்குநர் தட்சினாமூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை உணவு உற்பத்திக்கு போதுமான அளவு பெய்யும் என உத்தேசிக்கப்பட்டுள்ளதால் எவ்வித குறைபாடுமின்றி இவ்வாண்டிற்கான இலக்கை அடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கோவை வேளாண்மை பல்கலை கழக கூட்டரங்கில் இன்று (அக்டோபர் 12) மண்டல அளவில் வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் செயல்திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் வேளாண்மைத் துறை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இவ்வாய்வுக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை இயக்குநர் தெரிவித்ததாவது:-

தமிழக அரசு விவசாயம் செழிக்கவும், மற்றும் விவசாயிகளை காக்கின்ற வகையிலும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உறுதுணையாக இருந்து வருகின்றது. அவ்வாறு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்து உரிய பயனாளிகளை கண்டறிந்து அவர்கள் எளிமையாக பெறும் வகையில் அலுவலர்கள் பணிற்றிட வேண்டும்.

தமிழ்நாட்டின் 2017-18 ம் ஆண்டிற்கான உணவு உற்பத்தி இலக்கு 125 லட்சம் மெட்ரிக் டன்னாகும். இதில் கோவை மாவட்டத்திற்கு உணவு உற்பத்தி இலக்கு 91200 மெட்ரிக் டன்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் நெற்பயிர் 2400 ஹெக்டரிலும், சோளம் 27500 ஹெக்டரிலும், மக்காச்சோளம் 4600 ஹெக்டரிலும், கம்பு 100 ஹெக்டரிலும், பயறு வகைகள் 11050 ஹெக்டரிலும் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...