கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டெங்கு தடுப்பு தினத்தையொட்டி துப்புரவு பணிகள் தீவிரம்


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  டெங்கு தடுப்பு தினத்தினை முன்னிட்டு அரசு அலுவலர்கள், உள்ளாட்சி மற்றும் சுகாதார அலுவலர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில்  “முழுசுகதார தமிழகம் - முன்னோடி தமிழகம்” என்ற டெங்கு தடுப்பு தின உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர். 

பின்னர் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பேசுகையில்,  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க ஒவ்வொரு வியாழக்கிழமையும், டெங்கு தடுப்பு தினமாக அறிவிக்கப்பட்டதனடிப்படையில், வியாழக்கிழமைதோறும் கோவை மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் துப்புறவு சுகாதாரப்பணிகள், சிறப்பு மருத்துவமுகாம்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணி என பல்வேறு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

மேலும், கடந்த வாரம் இப்பணிகளில் அரசுடன் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் என பலரும் இணைந்து தூய்மைப் பணிகளை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளபட்டது. அதன்படி, இன்று (12.10.2017) தனியார் கல்லூரியை சார்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட தன்னார்வ மாணவ, மாணவியர்களால் மாவட்ட ஆட்சியர் வளாகத்தினையும், சுற்றுப்புற பகுதிகளும் தூய்மைப்படுத்தப்பட்டது. 

மாணவ மாணவியர்களாகிய நீங்கள், உங்கள் அருகாமையில் உள்ள பகுதிகளில் மழைநீர் தேங்கும் வகையிலான டயர்கள், டீகப்கள், தேங்காய் ஓடுகள், பழைய பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை தென்பட்டால் உடனடியாக சுத்தப்படுத்த வேண்டும் அல்லது அருகில் உள்ள உள்ளாட்சி அலுவலகங்களையோ, சுகாதார அலுவலகங்களையோ தொடர்பு கொண்டு தெரியப்படுத்திட வேண்டும். வருமுன் காப்பதே சிறந்தது என்பதை அனைவரும் நினைவில் கொண்டு சுயக்கட்டுப்பாடுடன் தங்கள் அருகாமையில் உள்ள பகுதிகளையும் தூய்மையுடனும், திறந்த தொட்டிகளிலோ, பாத்திரங்களிலோ தண்ணீர் தேக்கிவைக்காமலும் இருக்க வேண்டும்.

நமது கிராமத்தை தூய்மை கிராமமாகவும், நமது மாவட்டத்தை தூய்மை மாவட்டமாக மாற்றிடவும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எனது மாவட்டம் முழுசுகாதாரம் பெற்ற முன்னோடி மாவட்டமாக மாற்றிட நான் என்னால் இயன்றவரை ஒத்துழைப்பேன் என்று அரசு அலுவலர்களுடன், தன்னார்வலர்கள், பொத்துறை நிறுவனங்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் என அனைவரும் இன்று ஓர் உறுதிமொழியை எடுத்துக்கொண்டு தம் வாழ்வினில் அதை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி மற்றும் சுகாதார அலுவலர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள் என பலர் கலந்து கொண்டனர். 

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...