கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டெங்கு தடுப்பு தினத்தையொட்டி துப்புரவு பணிகள் தீவிரம்


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  டெங்கு தடுப்பு தினத்தினை முன்னிட்டு அரசு அலுவலர்கள், உள்ளாட்சி மற்றும் சுகாதார அலுவலர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில்  “முழுசுகதார தமிழகம் - முன்னோடி தமிழகம்” என்ற டெங்கு தடுப்பு தின உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர். 

பின்னர் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பேசுகையில்,  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க ஒவ்வொரு வியாழக்கிழமையும், டெங்கு தடுப்பு தினமாக அறிவிக்கப்பட்டதனடிப்படையில், வியாழக்கிழமைதோறும் கோவை மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் துப்புறவு சுகாதாரப்பணிகள், சிறப்பு மருத்துவமுகாம்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணி என பல்வேறு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

மேலும், கடந்த வாரம் இப்பணிகளில் அரசுடன் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் என பலரும் இணைந்து தூய்மைப் பணிகளை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளபட்டது. அதன்படி, இன்று (12.10.2017) தனியார் கல்லூரியை சார்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட தன்னார்வ மாணவ, மாணவியர்களால் மாவட்ட ஆட்சியர் வளாகத்தினையும், சுற்றுப்புற பகுதிகளும் தூய்மைப்படுத்தப்பட்டது. 

மாணவ மாணவியர்களாகிய நீங்கள், உங்கள் அருகாமையில் உள்ள பகுதிகளில் மழைநீர் தேங்கும் வகையிலான டயர்கள், டீகப்கள், தேங்காய் ஓடுகள், பழைய பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை தென்பட்டால் உடனடியாக சுத்தப்படுத்த வேண்டும் அல்லது அருகில் உள்ள உள்ளாட்சி அலுவலகங்களையோ, சுகாதார அலுவலகங்களையோ தொடர்பு கொண்டு தெரியப்படுத்திட வேண்டும். வருமுன் காப்பதே சிறந்தது என்பதை அனைவரும் நினைவில் கொண்டு சுயக்கட்டுப்பாடுடன் தங்கள் அருகாமையில் உள்ள பகுதிகளையும் தூய்மையுடனும், திறந்த தொட்டிகளிலோ, பாத்திரங்களிலோ தண்ணீர் தேக்கிவைக்காமலும் இருக்க வேண்டும்.

நமது கிராமத்தை தூய்மை கிராமமாகவும், நமது மாவட்டத்தை தூய்மை மாவட்டமாக மாற்றிடவும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எனது மாவட்டம் முழுசுகாதாரம் பெற்ற முன்னோடி மாவட்டமாக மாற்றிட நான் என்னால் இயன்றவரை ஒத்துழைப்பேன் என்று அரசு அலுவலர்களுடன், தன்னார்வலர்கள், பொத்துறை நிறுவனங்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் என அனைவரும் இன்று ஓர் உறுதிமொழியை எடுத்துக்கொண்டு தம் வாழ்வினில் அதை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி மற்றும் சுகாதார அலுவலர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள் என பலர் கலந்து கொண்டனர். 

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...