தற்கொலை செய்பவர்களில் பெண்களை விட ஆண்கள் அதிகம்

ஐதராபாத் : இந்த ஆண்டு , ஐதராபாத் நகரில் பெண்களை விட ஆண்களே அதிக அளவில் தற்கொலை செய்து கொண்டதாக குற்றவியல் புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

ஐதராபாத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 402 தற்கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் 265 பேர் ஆண்கள். 265 பேரில் 204 பேர் தூக்கு போட்டும், 39 பேர் விஷம் குடித்தும் தற்கொலை செய்து கொண்டனர். 

ஐதராபாத்தில் இந்த ஆண்டு 137 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர். இவர்கள் 15 பேர் தீக்குளித்தும், 16 பேர் விஷம் குடித்தும் இறந்துள்ளனர். பெண்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு பெரும்பாலும் குடும்ப பிரச்னையே காரணமாக கூறப்படுகிறது.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம் என சரியாக கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஆனால் ஆண்கள் அதிக அளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளதற்கு வேலை பளுவால் ஏற்படும் மனஅழுத்தம் அல்லது கடன் பிரச்னையே காரணமாக உள்ளது என்றார். 

மனநல மருத்துவர்கள் கூறுகையில், பெண்களை விட ஆண்கள் எளிதில் உணர்ச்சி வசப்பட கூடியவர்கள். சில சமயங்களில் இது தற்கொலை வரை கொண்டு சென்று விடுகிறது. பொதுவாக பெண்களே அதிக அளவில் மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். ஆனால் இதில் ஆண்கள் தங்களின் உணர்வுகளை வெளிக்காட்டுவதில்லை. இதுவே தற்கொலைக்கு காரணமாகி விடுகிறது. இது போன்ற மனஅழுத்தம் கொண்ட ஆண்களை கண்டறிவது மிகவும் கடினம் என்கின்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...