நாட்டின் வரா கடன் அளவு ரூ.9.53 லட்சம் கோடி

மும்பை : நடப்பு ஆண்டின் ஜூன் மாத இறுதி நிலவரப்படி, நாட்டில் உள்ள வங்கிகளின் வராக் கடன் அளவு ரூ.9.53 லட்சம் கோடி என தகவல் வெளியாகி உள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள ரிசர்வ் வங்கி, இந்த ஆண்டின் ஜூன் இறுதி வரையிலான 6 மாதங்களில் வங்கியில் உள்ள வராக் கடன்களின் அளவு 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய 6 மாதங்களில் வராக்கடன் அளவு 5.8 சதவீதம் அதிகரித்திருந்தது. இந்தியாவில் கம்பெனிகளுக்கான நிதி, வங்கிகள் மூலமே வழங்கப்பட்டு வருகிறது. இதில் பல நிறுவனங்கள், குறிப்பாக சிறு நிறுவனங்கள் முறையாக கடனை திருப்பிச் செலுத்தாததால், பொருளாதாரத்தில் மிகப் பெரிய தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசுடன், வங்கிகளும் வராக்கடன்களை வசூலிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கடன்களை திரும்பப் பெறுவதற்காக வட்டி விகிதங்களும் குறைக்கப்பட்டுள்ளன. 

இருந்தும் மாநில வங்கிகளில் அதிக அளவிலான தொகை வராக்கடனாக முடக்கப்பட்டுள்ளதால், புதிய கடன்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வங்கிகள் பணப்பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. வராக்கடனுக்காக 20 க்கும் மேற்பட்ட கம்பெனிகளின் சொத்துக்கள் கோர்ட் அனுமதியுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 11 மாநிலங்களில் மட்டும் ரூ.98,000 கோடி வராக் கடனாக உள்ளது. இது போன்று நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் ரூ.9.53 லட்சம் கோடி வரை வராக்கடனாக உள்ளது. இவ்வாறு ரிசர்வ் வங்கி பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...