ஜம்மு-காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு: 2 ராணுவ வீரர்கள் வீர மரணம்


ஜம்மு-காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். 

வடக்கு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தின் ஹஜின் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து காலை 5 மணி முதல் அந்தப்பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக சுட்டனர். பதிலுக்கு இந்திய வீரர்களும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் 2 பேர் வீர மரணமடைந்தனர். ஜின் பகுதியில் 8 தீவிரவாதிகள் பதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது. 

பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் நெருங்கி விட்டதாகவும், என்கவுன்ட்டர் தொடர்ந்து வருவதாகவும் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இரு தரப்பினரிடையே துப்பாக்கிச் சூடு தாக்குதலும் நடந்து வருகிறது. 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...